நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அம்மா சென்டிமென்ட் சொல்லி அவரை கட்டிப் போட்டுட்டா அவர் எப்படி உங்களுக்கு எதிரா விளையாடுவார் என சுச்சி கேள்வி கேட்டிருந்தார்.
Suchi Questions to Archana : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அர்ச்சனா தன்னுடைய ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தி வருகிறார். கடந்த வாரத்தில் இவருக்கும் பாலாவுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது.
பாலா வெளியே சென்று கண்ணீர் விட்டு பீல் செய்தார். அப்போது அர்ச்சனா உட்பட சிலர் வீட்டிற்குள் இருந்து பாலா அப்படி இப்படி என அவரைப் பற்றி பேசி கொண்டனர்.
அடுத்த கணமே நீ எனக்கு புள்ள மாதிரி, நீ எனக்கு வேணும்டா என பாலாவிடம் கண்ணீர் விட்டு அவரை அம்மா பாசத்தால் கட்டிப் போட்டார் அர்ச்சனா. ஆனால் அர்ச்சனாவின் பாசம் பொய் என நெட்டிசன்கள் பலரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சுச்சி அர்ச்சனாவிடம் மற்றவர்கள் எதையாவது சொல்ல வந்தால் எதையாவது பேசி அவர்கள் வாயை அடைத்து விடுகிறீர்கள். அன்னைக்கு உங்களுக்கும் பாலாவுக்கு இடையே அவ்வளவு சண்டை நடந்தது. உடனே எப்படி அப்படி ஒரு மாற்றம் உருவானது.
அம்மா சென்டிமென்ட் சொல்லி பாலாவை கட்டி போட்டுட்டா அவர் எப்படி உங்களுக்கு எதிராக விளையாடுவார் என கேட்டார். இதனால் கோபமான அர்ச்சனா பாலா இனி நீ என்னை அம்மாவா பார்க்காத, போட்டியாளரா பாரு. என்ன அடிச்சி காலி பண்ணு, நான் போய்க்கிட்டே இருக்கேன் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து சுச்சீ நான் உங்களை மாற சொல்லவில்லை. நீங்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என பாலாவுக்கு அட்வைஸ் செய்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.