SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் “எஸ் கே 21” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, காஷ்மீரில் நடைபெற்று வந்த Sk21 திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது படக்குழு நிறைவு செய்துள்ளதாகவும். ஆதலால் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் சென்னை திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.