எஸ் கே 21 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் “எஸ் கே 21” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘எஸ் கே 21’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் இந்த மாதம் முழுவதும் காஷ்மீரில் நடைபெற்று வரும் என்றும், அதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.