சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கர கதாநாயகியாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “எஸ்கே 21” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் 55 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படக்குழு தற்போது சென்னை திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, G20 உச்சிமாநாடு 2023 செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் நடக்கிறது மற்றும் பல அரசு நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் இப்போது திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.