Siruthai Siva About His Father

இறக்கும் தருவாயில் தன் அப்பா கடைசியாகச் சொன்ன வார்த்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் சிறுத்தை சிவா.

Siruthai Siva About His Father : தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்தப் படத்தைத் தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார்.

இந்த நான்கு படங்களும் பெரிய அளவில் ஹிட் அடித்தன. இதனையடுத்து தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார்.

சிறுத்தை சிவா அளித்த பல பேட்டிகளில் தன்னுடைய ரோல்மாடல் அப்பாதான் என கூறியுள்ளார். இவருடைய அப்பா கடந்த வாரம் தான் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய அப்பா கடைசியாக கூறிய வார்த்தைகள் குறித்து சிவா அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்பாவை காப்பாற்றிவிட வேண்டும் என எவ்வளவோ போராடியும் முடியவில்லை.

அவர் கடைசியாக என்னை பார்த்து நல்லா இரு என கூறினார். அந்த வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. அதை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன் என உருக்கமாக கண்கலங்கியபடி பேசியுள்ளார்.