மீனா வீட்டுக்கு வர அவரது அம்மா சொன்ன வார்த்தையால் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சீதாவை போட்டு அவரது அம்மா அடி கொடுத்து உன்னால இப்போ உன் அக்கா வாழ்க்கை கெட்டுப் போச்சு, அவ வாழ்க்கையை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று கொண்டிருக்க மீனா கண்ணீருடன் வீட்டுக்கு வந்து நான் என்ன பண்றதுன்னு தெரியல என்ன வீட்டுக்குள்ளவே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க அவரும் என் முகத்துல முழிக்காதனு சொல்லிட்டாரு என்று அழுது புலம்புகிறார்.

இதனைத் தொடர்ந்து ரவி இங்கே வருத்தமாக இருக்க ஸ்ருதி உன்னுடைய மனநிலையை எப்படி மாற்ற வேண்டும் என்று எனக்கு தெரியும் நீ போய் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வா என்று சொல்ல ரவி எனக்கு மனநிலை சரியில்ல நம்மால மீனா அண்ணி ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்க வாழ்க்கை என்னாகும் என்று நினைக்காதே ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்லுங்க இன்னொரு நாள் என்று ரவியை கூல் செய்கிறார்.

இங்கே ஸ்ருதியின் அப்பா அம்மா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க பிஜியுடன் வரும் அவரது அப்பா உன்னால என்னுடைய மானம் மரியாதை போச்சு என்று திட்டி, நீ எதுக்கு இன்னும் உயிரோட இருக்க தூக்கு மாட்டிட்டு தூங்க வேண்டியது தானே என அவமானப்படுத்துகிறார். மேலும் இந்த கல்யாணத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவு பண்ணி இருக்கேன், அந்த பணத்தை எடுத்து வை என்று கேட்க ஸ்ருதியின் அப்பா செக் எடுத்து வந்து கொடுக்கிறார். இனிமேல் என் முகத்திலேயே மிதிக்காத என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிஜூ அந்த ஸ்ருதியை சும்மா விடமாட்டேன் என கோபப்படுகிறார்.

அடுத்து மீனாவின் அம்மா நீ இங்க இருந்தா நீ தப்பு பண்ண மாதிரி தான் ஆகும் உன் வீட்டுக்கு போ அங்க அழுது புலம்பு, உன் பக்கம் நியாயத்தை எடுத்து சொல்லு. அண்ணாமலை அண்ணா கிட்ட மன்னிப்பு கேளு இல்லன்னா உன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று சொல்லி மீனாவை அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.