
முத்து ஷாக் கொடுக்க மீனா கோபப்பட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை பரசு என்ன சொன்னான் என்று கேட்க முத்து உங்க வீட்டுக்கு என் பொண்ண மருமகளா அனுப்ப நான் கொடுத்து வச்சிருக்கணும் ஆனா உங்க அம்மாவை நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு என் பொண்ணு நிம்மதியான வாழ்க்கை வாழணும், என்னுடைய தகுதிக்கு ஏற்ற இடத்துல நான் அவளை கட்டிக் கொடுத்திருக்கிறேன் என சொன்னதாக சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

ஒன்னு இல்லாத குடும்பம் அது என்ன பாத்து இப்படி சொல்றாரா என்ன விஜயா கோபப்பட அண்ணாமலை அமைதியா இரு என அடக்குகிறார். மேலும் முத்துவைப் பற்றிய வீணாவை பற்றியும் பாராட்டி பேசியதை சொல்ல விஜய் இதனால் இவன் பேசுற மாதிரி இருக்கு என்று நக்கல் அடிக்க ஆடியோ ரெக்கார்டு எடுத்து காட்டுகிறார்.
மேலும் அண்ணாமலை முதல்ல உனக்கு பரசு ஓட பொண்ணு தான் கேட்கலாம் இருந்தேன் என்று சொல்ல முத்து சந்தோஷப்பட மீனா அதை பார்த்து டென்ஷன் ஆகி ரூமுக்கு சென்று விடுகிறார். மீனா கோபப்படுவதை பார்த்ததும் முத்து ஆனாலும் மீனா மாதிரி யாரும் மீன் குழம்பு வைக்க முடியாது என்று சொல்லி சமாளிக்க மீனா ரூமுக்கு வந்ததும் அப்போ நான் மீன் குழம்பு வைக்க மட்டும் தான் இங்கே இருக்கேனா என்று கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

முத்துவை வேலைக்கு கிளம்புங்க என பிடித்து தள்ள பிறகு இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. அடுத்ததாக முத்து வேலைக்கு கிளம்ப மனோஜ் பேக்குடன் வீட்டுக்கு வர கையில என்னடா இன்னொரு பேக் என கேட்க லஞ்ச் பேக் என சொல்ல இவன் என்னமோ வேலைக்கு போற மாதிரியே தெரியலையே என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
ரோகிணி அவர் செய்கிற வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்கணும் உங்கள மாதிரி ஈஸியா கார் ஓட்டுற வேலை கிடையாது என்று சொல்ல மீனா முத்துவுக்கு பரிந்து பேச அண்ணாமலை ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க என ஆசுவாச படுத்துகிறார்.

பிறகு விஜயா நான் ரவிக்கு ஒரு பெரிய இடத்துல பொண்ணு பார்த்து இருக்கேன் நாளைக்கு அவங்க பொண்ணு பார்க்க என் வீட்டுக்கு வராங்க என்று சொல்ல முத்து வழக்கம் போல நக்கல் அடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.