மீனாவை அடிக்க பாய்ந்துள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துவுக்கு சுதாகர் செய்த வேலை என்பது மீனாவுக்கு தெரியும் என்ற விஷயம் தெரியவர என்கிட்ட இருந்து எதுக்காக இந்த விஷயத்தை மறக்க என்று கோபப்பட்டு வீட்டுக்கு கிளம்ப ரவி நானும் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.
வீட்டுக்கு வந்த முத்து கோபமாக மீனா மீனா என்று கூட்டிக் கொண்டே உள்ளே வர விஜயா நகாகல் செய்ய நான் பயங்கர கோபத்தில் இருக்கேன் சும்மா இருங்க என்று முத்து ஆவேசப்படுகிறார். கிச்சனுக்கு போன முத்து அங்கிருக்கும் சாமான்களை தட்டி விட்டு கோபப்படுகிறார்.
சுதாகர் பத்தி தெரிஞ்சு எதுக்கு நீ சொல்லாமல் இருந்த என்று கேள்வி கேட்க மீனா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இந்த நேரம் பார்த்து அண்ணாமலை வீட்டுக்கு வந்து விட முத்துவை கூப்பிட அங்கு வந்த முத்து மீனாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லி சத்தம் போடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என விஜயா முத்துவை இன்னும் ஏற்றி விட முயற்சி செய்கிறார்.
ஒரு கட்டத்தில் முத்து பணம் என்ன உங்க அப்பா வீட்டில் இருந்து எடுத்துட்டு வந்து கொடுப்ப என்று கேள்வி கேட்க உன் குடும்பத்தை பத்தி தப்பா பேசாதீங்க என்று மீனாவும் கோபப்பட அடிக்கப் பையன் அந்த நேரம் பார்த்து மீனாவின் அம்மாவும் தங்கையும் வந்து விடுகின்றனர்.
நடந்தது நடந்து போச்சு என்று மன்னிப்பு கேட்டு ஆடிக்கு அழைப்பதற்காக வந்ததாக சொல்ல உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுனதில் இது நான் ஆடிப் போயிருக்கேன் மொத்தமா கூட்டிட்டு போங்க என்று கோபப்படுகிறார்.
ரூமுக்குள் வந்த ரோகினி நீயும் என்கிட்ட இப்படி எல்லாம் கோபப்படுவியா மாம்ஸ் என்று கேட்க நான் எதுக்கு கோபப்பட போறேன் முதல்ல நமக்குள்ள ஒளிவு மறைவு கிடையாது அப்படி இருக்கும்போது ஏன் கோபப்பட போறேன் என்று கேட்க ரோஷினி தன்னுடைய உண்மை முகத்தை நினைத்து பயப்படுகிறார்.
பிறகு சீதாவை கட்டிக்கொண்டு அழுகிறார் மீனா. வீட்டுக்கு வந்த மீனாவின் அம்மா கண்ணீர் விட்டு கலங்க சீதா மாமா ரொம்ப ஓவரா தான் பண்றாரு, இன்னொரு முறை இப்படி பண்ணா நானே சும்மா விடமாட்டேன் என்று கோபப்பட அவருடைய அம்மா அப்படி எல்லாம் எதுவும் பண்ணி தொலச்சிடாத மீனா அந்த வீட்ல வாழனும் என்று சொல்லி அறிவுரை சொல்கிறார்.
சத்யா எல்லாத்துக்கும் காரணம் அந்த சுதாகர் தான் அவனை சும்மா விடமாட்டேன் என்று கோபப்பட்டு அடிக்க கிளம்ப அவரையும் தடுத்து நிறுத்துகிறார் மீனாவின் அம்மா. நான் ஏன் வந்து போயிருக்கேன் நீ வேற எதுவும் பண்ணி வச்சிடாத என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.