ரோகினி அம்மாவின் மீது மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. முத்து மற்றும் மீனா ரோகினி என் அம்மாவை பார்க்க வந்த நிலையில் ரோகிணி ரூமுக்குள் மறைந்திருக்க டாக்டர் இப்ப உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் ஆனால் ஒரு வாரத்திற்கு தனியாக விடாதீங்க கூட யாராவது கண்டிப்பா இருக்கணும் என சொல்கிறார். பிறகு பில் 18,000 என தெரிய வர அதை பார்த்து முத்து பணத்தை எடுத்து வருவதற்காக வீட்டிற்கு செல்ல அப்போதே வெளியில் வந்த மீனா அவங்க பேசுறது சரியில்ல ஏதோ தப்பா இருக்கு என்று தனக்கு இருக்கும் சந்தேகத்தை முத்துவிடம் சொல்ல அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என முத்து சொல்கிறார்.
இவர்கள் கிளம்பியதும் ரோகிணி பணத்தை கட்டி விட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு வித்யாவுக்கு வீட்டிற்கு வருகிறார். பிறகு மீனாவும் முத்துவின் பணத்துடன் ஹாஸ்பிடல் வந்து பார்க்க அங்கே ஆள் இல்லாததை பார்த்து மீனாவுக்கு சந்தேகம் இன்னும் அதிகமாகிறது.
வீட்டுக்கு வந்த ரோகினி அம்மாவும் ரொம்ப நல்லவங்க அவங்க கிட்ட பக்குவமா உன்னையே எடுத்து சொல்லிடலாம் என்று சொல்ல ரோகிணி கோபப்படுகிறார். ரெண்டு வாரத்துக்கு நீங்க ஏன் இது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது அந்த முத்து மீனா கூட பேசக்கூடாது என்று அம்மாவிடமும் கிரிஷ் இடமும் சொல்கிறார்.
பிறகு ரோகிணி வீட்டுக்கு வர முத்து மீனாவும் வீட்டுக்கு வர விஜயா எங்க இப்ப யாரையும் கூட்டிட்டு வரலையா என்று கேட்க அண்ணாமலை என்ன ஆச்சு என கேட்டதும் மீனா நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். பிறகு அண்ணாமலை வாசுதேவன் கொடுக்க வேண்டிய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டதாக பணத்தை எடுக்க அதை பார்த்து மனோஜ் வாய் இருக்க முத்து ஈ மிக்குது என நக்கல் அடிக்கிறார்.
பிறகு அண்ணாமலை முத்துவிற்கு நிறைய கடன் என்று இந்த பணம் அவனுக்கு தேவைப்படும் நான் வேணும் போது வாங்கிக்கிறேன் என்று விஜயாவிடம் கொடுக்க விஜயா அதை வாங்கி சந்தோஷப்படுகிறார்.அடுத்து ஸ்ருதியும் ரவியும் போனில் பேசத் தொடங்கி விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.