மீனாவை தூக்க வந்த சுதாகருக்கு செக் வைத்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அக்கம் பக்கத்தினர் எல்லோரும் வந்து முத்துவுடன் உட்க்கார்ந்து பேசிக் கொண்டிருக்க முத்து நீங்களும் சாப்பிடுங்க என்று மீனா வைத்த மீன் குழம்பை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் மீனாவின் அம்மா அப்பா போன் பண்ணலையா மாப்ள எப்போ வரிங்க என்ன ஏதுன்னு கேட்கலையா என்று கேட்க கேட்டாரு வருவேன்னு சொல்லி இருக்கேன். மீன் குழம்பு எடுத்துட்டு வரதா சொல்லி இருக்கேன் என்று சொல்ல சீதா அந்த குழம்பை சூடு பண்ணி மாப்பிள்ளை கிட்ட கொடு, மீன் குழம்பு எடுத்துட்டு நேரத்தோட வீட்டுக்கு போவாரு என்று சீதாவை அனுப்ப முத்து இருங்க அத்தை காலைல சூடு பண்ணிக்கலாம் என்று சொல்கிறார்.

எதுக்கு மாப்ள உங்களுக்கு சிரமம் இப்ப போய்ட்டு திருப்பி காலையில வந்து கிட்டு என்று சொல்ல நான் இப்ப போகவே இல்லையே என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இந்த ரூம்ல காத்து வராது கொசு கடிக்கும் என்றெல்லாம் சொல்லி எப்படியாவது முத்துவை கிளப்ப முயற்சி செய்ய முத்து மொட்டை மாடியில் படுத்துகிறேன் அங்கு ஜில்லுனு காத்து வரும் என்று மீனாவை பாய் போட சொல்ல மீனாவும் பாய் எடுத்து போய் போடுகிறார்.

பிறகு முத்து மீனாவிடம் நேத்து நல்லா தூங்கனியா என்று கேட்க நல்லா தூங்கினேன் என்று மீனா பதில் சொல்ல எனக்கு தான் தூக்கமே வரல என்று சொல்கிறார். ஏன் நான் இல்லன்னா என்று மீனா கேட்க ஆமா நீ இருந்தா ஏதாவது சண்டை போட்டுட்டே இருப்ப எனக்கு நல்லா தூக்கம் வரும் அப்ப நான் சண்டை போட்டா தான் உங்களுக்கு தூக்கம் வருமா என்று மீனா சத்தம் போட பாத்தியா இப்ப கூட சண்டை போடுற எனக்கு நல்லா தூக்கம் வருது என முத்து நக்கல் அடிக்கிறார்.

மீனா பாய் எடுத்துக்கொண்டு மேலே சென்றதை சுதாகரன் அவனது ஆட்களும் நோட்டம் விட மீனா மேல தான் படுத்து தூங்க போறா என்று நினைத்து அவரை கடத்த பிளான் போடுகின்றனர். இங்கே மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்க அவரது அம்மா மீனாவை கூப்பிட மீனா நான் போறேன் என்று சொல்ல முத்து போய் தூங்கு கதவு நல்லா சாத்திக்கோ என்று சொல்ல மீனா திரும்ப திரும்ப நான் போறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க போற போறேன்னு சொல்ற ஆனா போக மாட்ற என்று முத்து சொல்ல நான் போறேன் போங்க என்று மீனா வேக வேகமாக வீட்டுக்குள் வந்து விடுகிறார்.

மீனாவின் அம்மா படும் அவஸ்தையையும் விஜயாவும் தூக்கம் வராமல் தவிப்பாங்க என்று சொல்லியும் சீதாவும் மீனாவும் சிரித்து கொள்கின்றனர். பிறகு விஜயா போன் செய்து முத்துவையும் கூட சேர்த்து கூட்டிக்கிட்டிங்களா அவன கிளம்பி வர சொல்லுங்க என்று சொல்ல மீனா அவர் தூங்கிட்டாரு, அவர் மொட்டை மாடியில் தான் தூங்கிட்டு இருக்காரு. நாங்க வீட்ல இருக்கோம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவருக்கு போன் போட்டு கேளுங்க காலையில அவர் அங்கு வந்துடுவாரு என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.

அடுத்து ஊர் அடங்கிய பிறகு சுதாகர் ஆட்களுடன் மொட்டை மாடியில் வந்து மீனா என நினைத்து முத்துவை தூக்க போக போர்வையை விலக்கி முத்து அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு சுதாகரையும் சுதாகரையும் ஆட்களையும் அடி வெளுத்து எடுத்து ஓட விடுகிறார். நீங்க மதியமே வீட்டை நோட்டம் விட்டதை நான் பாத்துட்டேன் அதுக்காகத்தான் நைட்டு இங்க தங்கி இருந்தேன் இன்னொருமுறை என் குடும்பத்துக்குள்ள வந்தீங்க கை, கால் இருக்காது என எச்சரித்து அனுப்புகிறார்.

பிறகு எல்லாரையும் போய் தூங்குங்க இனிமே அவன் வரமாட்டான் பயப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

மறுநாள் காலையில் முத்து வீட்டுக்கு வர விஜயா விட்ட ரைடுல பயந்து அனுப்பி வெச்சிட்டாங்க என்று சந்தோஷப்பட முத்து மீனாவையும் உள்ளே கூட்டி வர விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.