விஜயா போட்ட பிளானுக்கு ரோகினி ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனாவுக்கு பூ கட்டுவதற்காக பூ எடுத்து வந்து கொடுத்துவிட்டு சென்ற நிலையில் விஜயா அதை எல்லாம் கட்டி ரோகிணி மிகவும் ரெடி பண்ணு என்று சொல்ல மீனா இதெல்லாம் கஷ்டம் இருக்கு கொடுக்க வேண்டிய பூ என்று கூறுகிறார்.

ஆனால் விஜயா காசு கூட அஞ்சு பத்து எக்ஸ்ட்ரா போட்டு தரேன் கட்டி உள்ளவைன்னு சொல்றேன்ல என அதட்டி வேலை வாங்குகிறார். உடனே பாட்டி வந்து என்ன சத்தம் ஓவரா இருக்கு எனக்கு கேட்டேன் இன்னைக்கு மனோஜ் ரோகினிக்கு முதலிரவு ஏற்பாடு பண்ணனும் இல்ல அதுக்கான வேலைகளை சொல்லிட்டு இருந்தேன் என்று சொல்ல ஆமா அதுவும் சரிதான் என்று பாட்டி சொல்கிறார்.

அப்படியே முத்து மீனா ரூமையும் ஏற்பாடு பண்ணு, அவங்களுக்கும் இன்னைக்கு முதலிரவு நடத்தியாகணும் என்று சொல்ல விஜயா அதெல்லாம் வேண்டாம் என என்று சொல்லும் விஜயா ஏன் இவங்களுக்கு என்ன அவ்வளவு அவசரம் கொஞ்ச நாளைக்கு வெயிட் பண்ண முடியாதா என்ன அவமானப்படுத்தி பேச மீனா எங்களுக்கு எந்த ஏற்பாடும் வேண்டாம் அவங்களுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும் என்று கூறுகிறார். பிறகு ரோகிணி அவர்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகுது இன்னைக்கு அவங்களுக்கு முதலிரவு நடக்கட்டும் எங்களுக்கு அப்புறமா வச்சுக்கலாம் என்று சொல்ல விஜயா மனோஜ் என இருவரும் ஷாக் ஆகிறார்கள். பிறகு இருவரும் சேர்ந்து ரோகினியை சம்மதிக்க வைக்கின்றனர்.

பிறகு ரோகிணியை அலங்கரித்து பால் கொடுத்து ரூமுக்குள் அனுப்பி வைக்க ரோகினி மனோ இச்சை மாமா என கூப்பிட்டு வெட்கப்படுகிறார். எல்லாம் இங்கிலீஷ் டைம்ல இருக்கணும் என்று ஆசைப்படும் மனோஜ் ஐஸ்கிரீமை எடுத்துக் கொடுத்து ப்ரபோஸ் செய்கிறார். இந்த பக்கம் இவர்களுக்கு ரொமான்ஸ் நடக்க இன்னொரு பக்கம் வீட்டுக்கு வரும்போது என்ன சத்தமே இல்லாமல் வீடு அமைதியா இருக்கு கல்யாணம் ஆன ரெண்டு பேரும் ஓடிப்போய்ட்டாங்களா என்று கேள்வி கேட்க மீனா இல்ல உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் இப்பதான் ரோகினி அத்தை உள்ளே அனுப்பினார்கள் என்று கூறுகிறார்.

பிறகு பாட்டி முத்து மீனா ரூமுக்கு வந்து உங்களுக்கும் முதலிரவு ஏற்பாடு பண்ணனும்னு நெனச்சேன் ஆனா விஜய் அதுக்கு விடல மீனாவும் வேண்டாம்னு சொல்லிட்டா என்று சொல்ல முத்து மீனாவுக்கு தேங்க்ஸ் சொல்ல பாட்டி இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்க போறீங்க என்று திட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து உங்களுக்கும் எந்த சபையும் சரியான நடக்கல அதனால குடத்துல மோதிரம் போட்டு எடுக்கறது அப்பளத்தை உடைக்கிறது இதெல்லாம் செய்யப் போறேன் என்று சொல்ல முத்து அதெல்லாம் வேலையில்லாதவங்க செய்யற வேலை என்று சொன்ன பாட்டி அதற்கான காரணம் என்ன என்பதை சொல்கிறார்.

மீனாவும் அதெல்லாம் எனக்கும் நடக்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல முத்து சம்மதித்து விடுகிறார். பிறகு நான் போய் குடத்தில் தண்ணீர் எடுத்துட்டு வரேன் என பாட்டி கிளம்ப முத்து நான் எடுத்துட்டு வரேன் என சொல்லி தண்ணீர் எடுத்து வர மீனா அதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.