சிந்தாமணி சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் பேச்சுக்கு மீனா பதிலடி கொடுத்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 17-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 17-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவும் சந்திராவும் அருண் வீட்டுக்கு சென்று சத்யாவை காப்பாற்ற உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்ல இன்னைக்கு என்னோட தம்பி எக்ஸாம் எழுத போயிருக்க முடியாது அவனுக்கு என்ன ஆயிருக்கும் என்றே தெரியாது என்று சொல்ல அருண் நான் பண்ணது ரொம்ப பெரிய உதவி எல்லாம் கிடையாது உங்க மாமா தான் இடத்தை கண்டுபிடித்து போய் இருக்காரு என்று சொல்ல நீங்க மட்டும் கரெக்டான நேரத்துக்கு லொகேஷன் அனுப்பவில்லை என்றால் எங்க மாமா எப்படி போயிருக்க முடியும் என்று சொல்லி மீண்டும் நன்றி சொல்லுகின்றனர்.

பிறகு அருணின் அம்மா வீட்டை சுத்தி காட்ட சந்திராவை அழைத்துச் செல்ல அருண் சீதாவை தனியாக ரூமுக்கு அழைத்து இப்பவே எங்க அம்மா கிட்ட சொல்லி பேசிட சொல்லவா என்று கேட்க முதல்ல என்னோட அக்கா மாமாவுக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் அவங்களுக்கு பிடித்திருந்ததுனா அதுக்கப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்லுகிறார். உடனே அருண் அம்மா சீதாவை பற்றி பெருமையாக பேசுகிறார் இந்த பொண்ணு போய் வாழ போற இடம் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும் என்று சொல்லி பூஜை ரூமில் இருந்து பூ மற்றும் பழம் எடுத்துக் கொண்டு வந்து சந்திராவிடம் கொடுக்க அருண் அம்மா பூவை சீதாவிற்கு வைத்து விடுகிறார் பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்பி விடுகின்றன. வெளியில் வந்து சீதாவிடம் அந்த தம்பி எல்லாருக்கும் இப்படி ஹெல்ப் பண்ணுவாரா இல்ல உனக்கு மட்டும் பண்ணுவாரா என்று கேட்க சீதா ஆட்டோ வருது என்ன சமாளித்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஆர்டர் விஷயமாக மீனா வந்திருக்க சிந்தாமணியும் வருகிறார் இப்ப எதுக்கு எல்லாரும் வர வச்சிருக்கீங்க ஆர்டர் வந்தா என்னிடம் சொல்ல வேண்டியதானே என்று கேட்டேன் இது அப்படி இல்லம்மா இப்போ ஆர்டர் கொடுக்கிறவங்க இந்த மண்டபத்துக்கு தெரிஞ்ச கார்ப்பரேட் கம்பெனிக்காரங்க அவங்க ஒரு ரூல்ஸ் வெச்சிருக்காங்க அதை சொல்றதுக்காக தான் எல்லாரும் வர வெச்சிருக்கோம் என்று சொல்லுகின்றனர் அதுக்கு எதுக்கு இந்த நண்டு சிண்டெல்லாம் கூப்பிட்டு இருக்கீங்க என்று கேட்க அவங்களோட டிசைன் புடிச்சி இருக்குன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். டெபாசிட் பணம் ரெண்டரை லட்சம் கட்ட வேண்டும் என்று சொல்ல, இது என்ன புதுசா இருக்கு என்று கேட்க அவங்க சொல்றத தாங்க நாங்க சொல்றோம் என்று சொல்லுகின்றனர் இந்த பொண்ணுக்கு குடும்பத்தில் சப்போர்ட் கிடையாது அவன் புருஷனை கார் தான் ஓட்டுறான் என்று சொல்லுகிறார். எப்படியோ டெபாசிட் மற்றும் டெக்கரேஷனுக்கு சேர்த்து நாலு லட்சம் ஆகும் அதை இவளால கொடுக்க முடியாது என்று சொல்லி நானே இந்த ஆர்டர் எடுத்துக்கிறேன் என்று கேட்கிறார்.

இல்லம்மா ரெண்டு நாள் டைம் கொடுத்து இருக்காங்க அதுல யார் முதல்ல எடுத்து வந்து கட்றாங்களோ அவங்களுக்கு தான் ஆர்டர் என்று சொல்ல, மீனா அவர்களிடம் இந்த அமௌன்ட் எனக்கு கொஞ்சம் பெருசு தான் ஆனா இருந்தாலும் இந்த ரெண்டு நாள்ல என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ரெடி பண்ணிடுவேன் என்று சொல்ல சிந்தாமணி நக்கலாக பேசுகிறார். மீனாவிற்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

முத்து வீட்டில் போன் பேசிக் கொண்டிருக்க மீனா வருகிறார் என்ன மீனா டல்லா இருக்க என்று கேட்க வெயில் அதிகமா இருந்தது அதுதான் என்று சொல்லுகிறார் உடனே ஆர்டர் கேட்ட விஷயத்தை சொல்ல நம்மளுக்கு தானே என்று முத்து கேட்க நமக்குத்தான் என்று இழுக்கிறார் என்னாச்சு என்று கேட்க டெபாசிட் அமௌன்ட் ரெண்டரை லட்சம் கொடுக்கணும்னு சொல்றாங்க என்று சொன்ன இது என்ன புதுசா இருக்கு என்று கேட்கிறார் ஆமாங்க அது கம்பெனியோட ரூல்ஸ் என்று சொல்லுகிறார். பணத்தை தான் எப்படி ரெடி பண்றது இல்லன்னு தெரியல நான் வேற எங்க ரெடி பண்ணிடுவேன் தைரியமா சொல்லிட்டு வந்துட்டேன் ரெண்டு நாள் டைம் கொடுத்து இருக்காங்க என்று சொல்ல நான் வேணும்னா கார் டீவ் கற்ற இடத்துல கேட்டு பாக்கவா என்று கேட்க அதெல்லாம் வேண்டாங்க என்று மீனா சொல்லுகிறார் அப்பாகிட்ட கேட்போம் என்று முடிவெடுத்து அண்ணாமலையை கூப்பிடுகின்றனர்.

பிறகு குடும்பத்தினர் அனைவரும் வந்து விட முத்து அண்ணாமலை இடம் நடந்த விஷயங்களை சொல்லுகிறார். அதற்கு விஜயா என்ன சொல்லுகிறார்? முத்துவின் பதில் என்ன?அண்ணாமலை என்ன சொல்ல போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 17-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 17-04-25