பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தவைகள் கொடுக்கும் பாலாஜி முருகதாஸ் பற்றியும் பேசினார் பாடகர் வேல்முருகன்.
Singer Velmurugan About Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை ரேகா மற்றும் பாடகர் வேல்முருகன் என இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிராமப்புறத்தைச் சார்ந்த வெள்ளந்தி மனிதராக வேல்முருகன் இப்போட்டியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அளித்த பேட்டி ஒன்றில் வீட்டிற்குள் நடந்த விசயங்கள் குறித்து பேசியுள்ளார்.
குரூபிசம் இது அது என என்னென்னவோ சொல்றாங்க.. ஆனா அதுக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது. நான் கருப்பா இருப்பதாலும் இங்கிலீஷ் பேசத் தெரியாது என்பதாலும் என்னிடம் யாரும் சரியா பழகல. பாட்டு கேட்க மட்டும் என்ன வெச்சிருந்தாங்க.
ஒருவேளை நானும் கலரா இருந்து நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசி இருந்தா என்னோட பிரெண்ட்ஷிப் வெச்சிருப்பாங்களோ என்னவோ என கூறியுள்ளார்.
மேலும் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய அப்பாவை ஜல்லிக்கரண்டியில் அடுத்ததாக கூறினார். பெத்த அப்பாக்கே அந்த நிலைமை என்றால் நமக்கெல்லாம்??
அதனால்தான் கிளீனிங் டீம் தலைவராக இருந்தும் பாலாஜி அர்ச்சனா சண்டையின்போது தலையிடவில்லை. கிராமத்துக்காரன் கோவத்துல நாலு வார்த்தை பேசிடுவே. பாலாஜி கை உன்கிட்ட அவருக்குத் தான் பிரச்சனை.
அது எனக்கு பாசிட்டிவ்வா தான் மாறி இருக்கும்.. ஒருத்தர் கிட்ட அடி வாங்குறது எனக்கும் அசிங்கம் தான். அதனால் தான் பிரச்சனை வேண்டாம் என நான் அமைதியாக இருந்து விட்டேன் என கூறியுள்ளார்.