Simbu Vs Vishal : AAA விவகாரத்தில் சிம்பு தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து பெரும் தோல்வியடைந்த படம் AAA.
இந்த படத்திற்கான ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வருவதில்லை. டப்பிங் பேசவில்லை என படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
[ இதையும் படிங்க : ஆளே மாறப்போகும் தளபதி – ரசிகர்களுக்கு காத்திருக்கும் பக்கா ட்ரீட்.! ]
இந்த புகாரை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விஷாலும் தேனப்பனும் சிம்புவை வைத்து கட்டப்பஞ்சாயத்தெல்லாம் நடத்தியதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.
இதனையடுத்து சிம்பு சென்னை ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி கட்டப்பஞ்சாயத்து நடத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என விஷாலுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இதனால் சற்று ஓய்ந்திருந்த AAA பட சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது.