நடிகர் சிம்பு, கலையரசன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை பா. ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் அதற்காக ஆதாரம் இது தான் என சிம்பு, ரஞ்சித், கலையரசன் ஆகியோர் இணைந்து எடுத்து கொண்ட போட்டோவையும் ஷேர் செய்து வைரலாக்கி வந்தனர்.
இந்நிலையில் தற்போது இது 2 வருடத்திற்கு முன்னர் காலா பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோ எனவும் பா ரஞ்சித் சிம்புவை இயக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பா ரஞ்சித் அடுத்ததாக ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர்களை வைத்து சல்பேட் பரம்பரை என்ற படத்தை இயக்க இருப்பதும் தெரிய வந்துள்ளது.