மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிம்பு.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
டைம் லூப் பாணியில் வெளியான இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் சிம்பு 48 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.