மீண்டும் ஒரே சீரியலில் ஜோடி சேர உள்ளனர் சித்து மற்றும் ஸ்ரேயா.
தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா.
இந்த சீரியலில் ஜோடியாக நடித்ததை தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நீக்க வாழ்க்கையிலும் நிஜ ஜோடியாக மாறினார். சிட்டு ராஜா ராணி சீசன் 2 சீரியல் நடித்து முடித்த நிலையில் ஸ்ரேயா ரஜினி சீரியலில் நடித்து முடித்தார்.
தற்போது இருவரும் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து புதிய சீரியலில் நடிக்க உள்ளனர்.
ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் தான் இருவரும் ஜோடி போட்டு நடிக்க உள்ளனர். இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த சீரியல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.