கணவனை விவாகரத்து செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சன் டிவி சீரியல் நடிகை சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சந்தியா.

தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். முதல்முறையாக கணவருடனான விவாகரத்துக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

நானும் என்னுடைய முன்னாள் கணவரும் காரின் வெளியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கியவருக்காக நான் காரில் இருந்து இறங்கி ஓடிச் சென்று உதவினேன்.

அதனால் என்னுடைய கணவர் நீ என்ன அவருடைய பொண்டாட்டியா என கேள்வி கேட்டார். இதே போல் ஆயிரம் சம்பவங்கள் நடந்தன, இதனால் மனமுடைந்து ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.