
உச்ச நடிகர் ஒருவர் தன்னை ஆபாசமா வர்ணித்து மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார் சீரியல் நடிகை ரிஹானா.
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடத்தாது வருபவர் ரிஹானா. வெள்ளித்திரையிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பெண் ரசிகைகளை அதிகம் கொண்ட நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தேன். அப்போது என் மொபைல் நம்பரை வாங்கி கொண்டார்.
நான்கு நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்து அடுத்தடுத்து ஆபாச மெசேஜ்கள் வந்தது, நம்பரை பிளாக் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்ணவ் வீட்டில் என் மனைவி இல்லை, நீ வரியா என படுக்கைக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய பேட்டியால் யார் அந்த உச்ச நடிகர் என ரசிகர்கள் அலசி ஆராய தொடங்கி உள்ளனர்.
