Sengottaiyan Interview
Sengottaiyan Interview

Sengottaiyan Interview – சென்னை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தரும் வகையில் பாடத்திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது, ‘ மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.,

புதிய பாடத்திட்டத்தில் என்னென்ன பாடங்கள் கொண்டுவருவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கலாம்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி தகுதி தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், கல்வி கற்கும் முறையில், கற்றல் மட்டுமின்றி, செயல்முறை பாடங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கேட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளி கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது’ என்று பெருமையுடன் கூறினார்.

மேலும் பள்ளி கல்வித்துறையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.