கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Semester Exams Cancelled in Tamil Nadu : சீனாவில் உருவான கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப்படிப்புை பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்..!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரவித்துள்ளது.
மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக்குழு(UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்
முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.