Seemathurai Tamil Review :
சுஜய் கிருஷ்ணாவின் புவன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் கீதன், வர்ஷா, விஜி சந்திரசேகர், மகேந்திரன், கயல் வின்சென்ட் என பலர் இணைந்து நடிக்க இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சீமத்துரை.
கதைக்களம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கதை அழகான கிராமத்து காதலை பேசும் படமாக உருவாக்கியுள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரும் கருவாடு விற்கும் விஜியின் மகனுமான நடித்துள்ளார் படத்தின் கதாநாயகன் கீதன் ( மருது )
அதேபோல் ஊரில் செல்வாக்கு உள்ள தலைவரின் வீட்டு மகளாக நடித்துள்ளார் வர்ஷா ( பூரணி ).
பூரணி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரிக்கு படிக்க செல்வேன் என வீட்டில் அடம் பிடிக்கிறார்.
ஆனால் வீட்டில் பெற்றோர் கல்லூரிக்கு எல்லாம் போக தேவையில்லை. படிச்சது போதும் என கூறி விடுகின்றனர்.
இதனையடுத்து பூரணியின் தாய் மாமாவாக நடித்துள்ள காசி ராஜனின் சிபாரிசால் பூர்ணிமாவை ஒருவழியாக படிப்பதற்கு கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பூரணி படிக்கும் அதே கல்லூரியில் தான் மருதுவும் படித்து வருகிறார். இவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பிலேயே மருதுவிற்கு பூரணி மீது காதல் வந்து விடுகிறது.
அதன் பின்னர் மருது தொடர்ந்து பூரணியை பின் தொடர்ந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார்.
ஒரு கட்டத்தில் பூரணியின் குடும்பத்தாரிடம் அடி உதையும் வாங்குகிறார், இதனால் பூரணிக்கும் மருது மீது காதல் உருவாகிறது.
அதன் பின்னர் இவர்களது காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் இறுதியில் என்ன நடக்கிறது? இவர்கள் இருவரும் ஒன்று சேர்கிறார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.
கீதன் :
ஒய் படத்திற்கு பிறகு கீதன் இப்படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார், தன்னுடைய எதார்த்தமான நடிப்பையும் கிராமத்து பாஷையாலும் ரசிகர்களை அசர வைக்கிறார்.
வர்ஷா :
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 96 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த வர்ஷா இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
நாயகியாக அறிமுகமான முதல் படம் போல இல்லாமல் எதார்த்தமான அமைதியான கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
96 படத்தை போலவே அம்மணி இந்த படத்திலும் தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
விஜி சந்திரசேகர் :
திறமை வாய்ந்த நடிகையான விஜி சந்திரசேகர் கருவாடு விற்கும் பெண்மணியாகவும் நாயகனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
முழுமையான ஈடுபாட்டுடன் தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்க்கும் மகனுக்கும் இடையேயான காட்சிகள் நம்மை கலங்க வைக்கும் அண்மையில் அவ்வளவு அழகாக அமைந்துள்ளன.
மகேந்திரன், கயல் வின்சென்ட் :
கதாநாயகனுக்கு நண்பர்களாக மகேந்திரனும், கயல் வின்சென்ட்டும் நடித்துள்ளனர். படம் முழுக்க இவர்கள் தங்களது கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதிக்கு வலு சேர்ந்துள்ளனர்.
மற்ற நடிகர் நடிகைகள் :
கதாநாயகிக்கு மாமாவாக நடித்துள்ள காசிநாதன், வில்லனாக நடித்துள்ள ஆதேஷ் பாலா, ஊமையனாக நடித்துள்ள நிரஞ்சன் ஆகியோர் தங்களது பங்கினை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர்.
காமெடியனாக நடித்துள்ள பொரி உருண்டை சுரேஷின் நடிப்பு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.
இசை :
கிராமத்து கதை என்றாலே அதற்கு உயிர் கொடுப்பது இசை தான். இப்படத்திற்கு அப்படி தான் இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் தத்ரூபமாக உயிர் கொடுத்துள்ளார்.
படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தையும் கச்சிதமாக அமைத்து கொடுத்துள்ளார். இனி இவருக்கு திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
அதே போல் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் திருஞானசம்பந்தம். அழகான ஒளிப்பதிவுகளால் கிராமத்து வாசத்தை அழகாக படம் பிடித்துள்ளார் என்றே கூறலாம்.
படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் அழகான கோர்வையாக கொடுத்துள்ளார் எடிட்டர் வீர செந்தில் ராஜ்.
மற்ற கலைஞர்கள், நடிகர் நடிகைகள் ஆகியோரும் தங்களது பங்களிப்பினை முழுமையாக கொடுத்து படத்திற்கு மெழுகேற்றியுள்ளனர்.
இயக்குனர் :
அழகான திரைக்கதை, எதிர்பாராத கிளைமாக்ஸ் என படத்தை முழுக்க முழுக்க ரசிக்கும் படியாக உருவாக்கியுள்ளார் சந்தோஷ் தியாகராஜன்.
முதல் பாதியில் படம் கொஞ்சம் மெதுவாக செல்வது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் நம்மை கவர்ந்து விடுகிறார்.
படத்தின் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகளால் நம்மை பல இடங்களில் கண் கலங்க வைக்கிறார்.
தம்ப்ஸ் அப் :
- படத்தின் கதை
- எதிர்பாராத கிளைமாக்ஸ்
- காதல் காமெடி கலாட்டாக்கள்
தம்ப்ஸ் டவுன் :
முதல் பாகத்தில் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருக்கலாம்.