பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கையில் மாலையுடன் போட்டோ வெளியிட்டுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடிபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் ஈஸ்வரி இனிமே இவன் இங்கதான் இருப்பான் என முடிவெடுக்க இன்னொரு பக்கம் ராதிகாவும் ராதிகா அம்மாவும் அவர் மட்டும் இன்னைக்கு குடிச்சிட்டு வரட்டும் ஒரு வழி பண்ணுகிறேன் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மாலையுடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
போட்டோ உடன் என்ன மேன் இரண்டாவது மேரேஜ் டிவோர்சா? மூணாவது கல்யாணமா என கேட்டு அட இல்லங்க என்னுடைய சாவுக்கு நானே மாலையோட ரெடியாகிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வரும் நாட்களில் ராதிகா மூட்டை ஏற்றுக்கொண்டு ஈஸ்வரி வீட்டிற்கு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தான் கோபி இப்படி ஒளிவு மறைவாக சொல்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.