நயன்தாரா குறித்து சந்தானம் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கி ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடம் பிடித்து வலம் வருபவர் சந்தானம். தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து அசத்தி வரும் இவரது நடிப்பில் கடந்த 28ஆம் தேதி தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படம் வெளியானது.

திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக படங்களில் தோல்வியை சந்தித்து வந்த சந்தானம் இப்படம் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா குறித்து அவர் பகிர்ந்து இருக்கும் சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி, அப்பேட்டியில் சிம்புவின் வல்லவன் என்ற படத்தில் நடித்ததில் இருந்து தனக்கு நயன்தாராவை நன்றாக தெரியும் என்று கூறிய சந்தானம் இருவருக்கும் இடையே உள்ள உறவு அண்ணன்- தங்கை உறவு போன்றது என்றும் சினிமாதுறையில் எனக்கு கிடைத்த தங்கை நயன்தாரா தான் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நான் நயன்தாராவின் வீட்டிற்கு சென்ற போது எனக்கு தட புடலாக விருந்து வைத்தார்கள் என்று கூறி நயன்தாரா என்னை ‘அண்ணா’ என்று தான் எப்போதும் அழைப்பார் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு எனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் அப்போது தான் தாய்மாமன் சீர் செய்வேன் எனவும் நகைச்சுவையுடன் தெரிவித்திருக்கிறார்.