நடிகை சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் மொழியில் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு நடிகரான நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பத்து வருடங்களாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் ஒன்று சேர்ந்து வாழவில்லை. அதற்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். பின்னர் சமந்தா பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருவது மட்டுமல்லாமல் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
இவருக்கு விவாகரத்தாகி ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தி ஃபேமிலி மேன் 2 படத்தில் நடித்து வரும் இவருக்கு பாலிவுட் நடிகர் ஒருவருடன் காதல் மலர்ந்ததாகவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சமந்தா இந்த தகவலை மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உண்மை என்ன என்பது கொஞ்ச நாள் போனால் மொத்தமாக தெரிந்துவிடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.