நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிக் கொண்டே செல்கிறார் சமந்தா.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இவர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்கத் தொடங்கி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அக்கட தேசத்து மருமகளான சமந்தா நான்கு வருடம் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டியது தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
அதற்கேற்றாற்போல சமந்தாவும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். ரசிகர்களும் கவர்ச்சியில் எல்லையை மீறி போவதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா மீண்டும் ஒரு கலர் உடையில் சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.