நடிகை சமந்தா நாக சைதன்யாவை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samantha Decision on Marriage Life : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

4 வருடமாகியும் குழந்தை பெற்று கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். திருமணத்திற்கு முன்பு நடிப்பதை விட தற்போது அதிக கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் இவரது நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் 2 படத்தில் மிக மோசமான கவர்ச்சியில் நடித்திருப்பார். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : அதிமுக கண்டனம்

இது நாக சைதன்யாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இருப்பினும் அந்த நான் அப்படித்தான் நடிப்பேன் என கூறி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் அவருக்கும் அவருடைய கணவர் நாக சைதன்யாவுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

எனக்கு END-ஏ கிடையாது…, மீண்டும் வருகிறார் சின்ன கலைவாணர் விவேக்..! | LOL Enga Siri Paappom | News

இதன் காரணமாகவே அவர் சமூக வலைதளப் பக்கங்களில் சமந்தா அக்கினேனி என இருந்த பெயரை சமந்த ருத் பிரபு என மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. சமந்தா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.