S J Suriya Revealed Mersal Secret :
பிடிக்காத கதையாக இருந்தாலும் மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தது ஏன் என்ற உண்மையை எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் தந்தை மற்றும் 2 மகன் என மொத்தம் 3 வேடங்களில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராயை அசிங்கமாக சித்தரித்த அஜித்தின் வில்லன் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!
3 விஜய்க்கு ஜோடியாக நித்தியா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று பேர் நடித்திருந்தனர். வில்லனாக எஸ். ஜே சூர்யா நடித்திருந்தார்.
முதலில் அட்லீ கதை கூறிய போல் அப்பா மகன்களை பிரிக்கும் கதையாக இருக்க கூடாது என வேண்டி கொண்டேன், ஆனால் அதே போல் தான் இருந்தது. அட்லீயிடம் என்ன சார் இது என கேட்டேன்.
அதன் பிறகு தான் அவர் ஒரு காட்சியை மட்டும் சொல்கிறேன், பிடித்திருந்தால் மட்டும் ஓகே சொல்லுங்க என கூறி 30 வருடம் கழித்து வந்து உன்னை அழிப்பேன் என இடம் பெற்றிருந்த காட்சியை சொன்னார். அதன் பின்னர் தான் நடிக்க ஒப்பு கொண்டேன் என கூறியுளளார்.