Rohit Sharama New Record :
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. இவர் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர். இதனால் ரசிகர்கள் செல்லமாக ‘ஹிட்மேன்’ என்று அழைத்து வருகின்றனர்.
ஹிட்மேன் நடந்து கொண்டு உலகக் கோப்பையில் நம்பமுடியாத அளவிற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
நேற்று நடந்த வங்க தேச அணியுடனான போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககரா சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் நான்கு சதங்கள் விளாசியுள்ளனர்.
செல்பேசிக் கதிர்வீச்சு, குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கின்றதா?. தெரிந்துகொள்வோமா!
மேலும் அதே போட்டியில் 96 ரன்கள் அடித்திருக்கும்போது 533 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் உலகக்கோப்பையில் 500 ரன்களை தாண்டியிருந்தார். அதன்பின் தற்போது ரோகித் சர்மா 500 ரன்களை தாண்டி சாதனைப் படைத்துள்ளார்.
மேலும், இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து உள்ளார். அடுத்து வார்னர் 516 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.