பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக என்ன காரணம் என்ற கேள்விக்கு ரித்திகாவின் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி.

இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள ரித்திகா இன்றைய கஷ்டம் நாளைய சந்தோஷம் என பதிவு செய்ய உடல் எடை கூடியதால் இவரை வெளியேற்றி விட்டார்களா என்ற கேள்வியும் குழப்பமும் எழுந்துள்ளது.

அதோடு ஏற்கனவே கோபி அமிர்தா கேரக்டர் நெகடிவ்வாக மாற போவதாக சொன்ன நிலையில் நெகட்டிவ் கேரக்டர் செட்டாகாது என விலகி விட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.