சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக ரேஷ்மா பசுபலேட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இவர் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி ஜீ தமிழில் சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரேஷ்மா தற்போது லைவ் வீடியோ ஒன்றில் இரண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகையால் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போவதாகவும் ஒரு சீரியிலிருந்து வெளியேறப் போவதாகவும் அது எந்த சீரியல் என்று அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன் தற்போது வரை அது குறித்து முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ