தனுஷ், அமலாபால் உட்பட 14 பிரபலங்களுக்கு ரெட் பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் நடிகர்களாக உள்ளவர்கள் மீது தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் வந்து கொண்டே இருந்தால் அவர்கள் நடிப்பதற்கு தடை விதித்து ரெட் கார்ட் போடப்படுவது வழக்கம்.
நடிகர் வடிவேலு, சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் இப்படி ரெட் கார்ட் போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்து ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளனர். இப்படியான நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அமலாபால் ராய் லட்சுமி உட்பட 14 பிரபலங்களுக்கு ரெட் கார்ட் போட தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு தனக்கு படம் நடித்துக் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்து இருப்பதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் அமலா பால் மற்றும் ராய் லட்சுமி ஆகியோர் ஷூட்டிங்கிற்கு தங்களுடன் 10 முதல் 20 பவுன்சர்களை கூட்டி வந்து அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்பதால் ரெட் கார்ட் போடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவலால் தனுஷ், அமலா பால் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.