வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு பிறகு நடிகை ராஷ்மிகா தன்னை பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு ஒரு தரமான அட்வைஸை கொடுத்துள்ளார்.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல இளைஞர்கள் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வரும் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா அந்நிகழ்ச்சிக்கு பிறகு காரில் சென்று கொண்டிருக்கும்போது தன் பின்னால் பைக்கில் வந்த இரு நபர்கள் ஹெல்மெட் அணியாததை பார்த்துள்ளார். உடனடியாக காரை நிறுத்தி அவர்களிடம் ஹெல்மெட் போடுங்கள் இப்பவே என்று கூறி சென்றுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் “சரி அக்கா” என்று கூறி உடனடியாக ஹெல்மெட்டை அணிந்து கொண்டனர். அந்த வீடியோ தற்போது இதயத்தில் வைரலாகி வருகிறது.