அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த ரஜினிகாந்தின் பேட்டியின் தகவல் வைரலாகி
வருகிறது.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது நடிப்பில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வரும் இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை சென்றார்.

அங்கு பல பகுதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு சென்று அங்குள்ள அனுமன் கோவிலில் அவரது மனைவி லதா ரஜினிகாந்துடன் தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து ராமர் கோவிலில் தரிசனம் செய்த நடிகர் ரஜினி அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அதில், “இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்’ என்று கூறி சென்றார்.