Rajinikanth Conditions to Annathae Team
Rajinikanth Conditions to Annathae Team

இனி அது நடந்தால் மட்டுமே அண்ணாத்த படம் தொடங்க வேண்டும் என ரஜினிகாந்த் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.

Rajinikanth Conditions to Annathae Team : தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கினார்.

இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வக்கீலாக நயன்தாரா அதுமட்டுமல்லாமல் குஷ்பூ, மீனா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

படுக்கையறையில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!

மேலும் சூரி, சதீஷ் என இன்னும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

இந்த நிலையில்தான் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.

இன்னும் கிட்டத்தட்ட 55 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டியது உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அளித்து வருகின்றன.

எனினும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவில் ஒரே ஒரு கரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டுமென ரஜினிகாந்த் தன்னுடைய படக்குழுவிற்கு கட் அண்ட் ரைட்டாக கண்டிஷன் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்னும் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் இதிலிருந்து எவ்வளவு பேர் எவ்வளவு நாளில் மீள போகிறார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.

ஒரு நோயாளி கூட இல்லாத நிலை உருவாக இன்னும் எப்படியும் ஒரு வருடமாவது ஆகும் என்பதால் அண்ணாத்த படத்தின் சூட்டிங்கை அதுவரை தள்ளி வைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அண்ணாத்த திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.