விஷயம் தெரியாமல் போட்டிக்கு ஜோராக கிளம்பிக் கொண்டிருக்கிறார் சிவகாமி.

Raja Rani2 Episode Update 18.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணனை வெளியே ஒரு இடத்திற்கு வரச் சொன்ன சந்தியா அவரிடம் ஒரு கிப்ட்-ஐ கொடுக்கிறார். சரவணன் கிப்டை பிரித்து பார்க்க அதில் வாட்ச் ஒன்று இருக்கிறது.

யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..

பிறகு சந்தியா இந்த வாட்ச் எப்போதும் உங்க கையில இருந்துட்டே இருக்கனும் என கூறி அந்த வாட்சை கட்டி விடுகிறார். பிறகு சந்தியா சரவணனை அனுப்பி விட்டு அங்கிருந்து வீட்டிற்கு வருகிறார்.

இந்த பக்கம் சிவகாமி போட்டிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கணவர் இந்த நேரத்தில் கூட தனக்கு உதவி செய்யவில்லை என புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய கணவர் வருகிறார். சமோசா, கடலை மிட்டாய் உள்ளிட்டவைகளை வாங்கி வருகிறார். பிறகு சிவகாமி சென்னை செல்வதற்கான உடைகளை எடுத்து வந்து பேக்கில் வைக்க சொல்கிறார். அவரும் எடுத்து வந்து வைக்கிறார். தன்னுடைய கணவரிடம் வர இடத்தில் நாகரிகமாக சாப்பாட்டில் கட்டுப்பாடோடு நடந்து கொண்டு சரவணன் பெயரை காப்பாற்றுங்கள் என கூறுகின்றார்.

பிறகு அவருடைய கணவர் சரி என்று சொல்லிவிட்டு வெளியே சொல்ல அவர் முன்பு கடலை மிட்டாயை எடுத்து பேக்கில் வைத்துக் கொள்கிறார். பார்வதி வெளியில் காய்கறி வாங்கிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய வருங்கால கணவர் பாஸ்கர் வருகிறார். பாஸ்கரை பார்த்ததும் பார்வதியின் முகம் மாறுகிறது. காய்கறிகாரன் யார் அவர் என கேட்க எனக்குத் தெரிந்தவர் என பார்வதி சொல்கிறார். பாஸ்கர் என்னை கட்டிக்க போறவர் என சொல்லு என கூறிவிட்டு எங்களோட ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு என கேட்க கடைக்காரர் சூப்பர் என கூறுகிறார்.

அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி

பிறகு ஏன் என்னிடம் சரியாக பேச மாட்ற, மெசேஜ் பண்ணா மெசேஜை பார்க்கிற ஆனா திரும்ப மெசேஜ் பண்ண மாட்ற, வெளியே போகலாம் என்று கூப்பிட்டாலும் வர மாட்ற. இதற்கெல்லாம் காரணம் என்ன என கேட்க பார்வதி அப்புறம் பேசலாம் என கூறுகிறார். அதன்பிறகு பாஸ்கர் நான் நேராகவே கேட்கிறேன் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையா என கேட்கிறார். அப்புறம் பேசலாம் வீட்ல யாராச்சும் பார்த்தா பிரச்சனையாகும் என கூறுகிறார் பார்வதி.

அதன்பிறகு பாஸ்கர் நாளைக்கு உனக்காக காத்துகிட்டு இருப்பேன். ஆபீஸ்க்கு வந்து நீயாக பேசணும். நீ வந்து பேசினா கல்யாணத்தில் உனக்கு விருப்பம் என எடுத்துக் கொள்வேன். இல்லையென்றால் உனக்கு விருப்பம் இல்லை என புரிந்து கொள்வேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த பக்கம் சந்தியாவும் சரவணனும் சென்னைக்கு செல்வதற்கான பொருட்களை வாங்கி வந்து விட்டு வழியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். சரவணன் போட்டியை நினைத்தால் ஒரே படபடப்பாக இருப்பதாக கூறுகிறார். பிறகு நீங்களே கூட பாருங்க என சந்தியாவின் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைக்கிறார். பின்னர் சந்தியா அவருக்கு நம்பிக்கை சொல்கிறார். பிறகு இருவருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் நடக்க பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

அர்ச்சனா ப்ளைட் டிக்கெட்டை திருடி எடைக்கு போட்டது தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் போட்டிக்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் எந்த மாதிரியான பிரச்சனை வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.