முதல் ரவுண்டில் சொதப்பிய சரவணனுக்கு போட்டியில் மீண்டும் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
Raja Rani2 Episode Update 09.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முதல் ரவுண்டில் ஜிலேபி வராமல் சொதப்பினார் சரவணன். இதனால் கடும் அப்செட் அவர் இருக்க அவரை அனைவரும் சமாதானம் செய்தனர். பிறகு சந்தியா அனைவரையும் ரூமிற்கு அனுப்பி வைத்துவிட்டு போட்டி நடந்த இடத்துக்குச் சென்று அந்த இன்டக்ஷன் ஸ்டவ் ஏன் ஒர்க் ஆகவில்லை என செக் செய்தார். அந்த இடத்திற்கு வந்த போட்டி குழுவினர் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என கேட்டனர். உங்களோட அனுமதி இல்லாமல் இந்த இடத்திற்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த இன்டக்ஷன் ஸ்டவ் வேலை செய்யவே இல்லை அதனால்தான் அவரால் ஜிலேபி செய்ய முடியவில்லை என கூறினார். பிறகு நிகழ்ச்சி குழுவினர் அதனை பரிசோதனை செய்ய இன்டெக்ஸன் ஸ்டவ் வொர்க் ஆகவில்லை என்பது தெரியவந்தது. பிறகு அந்த ஸ்டவ்வின் ஒயர் துண்டிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இதனையடுத்து சரவணன் அடுத்த ரவுண்டுக்கு அனுப்பப்பட்டார். சரவணன் பார்க்கில் இதுபற்றி சோகத்துடன் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சந்தியாவுக்கு சரவணனின் அண்ணா போன் செய்து என்ன எது என விசாரிக்க நான் எல்லாவற்றையும் அப்புறம் சொல்கிறேன் என கூறிவிட்டு சந்தியா போனை வைத்து விடுகிறார். சரவணனை சமாதானம் செய்யப் போய் சரவணன் என்னை கொஞ்ச நேரம் தனியாக விடுங்க என கூறி விடுகிறார். பிறகு சந்தியா அங்கு அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த பெண்மணியிடம் சென்று பேப்பர் பெண்ணை வாங்கி ஒரு கடிதம் எழுதுகிறார். அதனை சரவணன் இடம் கொடுக்க முடியுமா என அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்.
அவரும் சரி என ஒப்புக் கொண்டு சரவணனிடம் எடுத்துக்கொண்டு போய் கொடுக்கிறார். பிரித்துப் படித்த சரவணன் இது சந்தியா எழுதிய காதல் கடிதம் என்பதை அறிந்து கொண்டு இதனை சந்தியா தானே கொடுத்தாங்க என சிரிப்புடன் கேட்கிறார். அந்தப் பெண்ணும் ஆமாம் என செல்கிறார். பிறகு சரவணன் சந்தியாவை அழைத்து பேசுகிறார். மூவரும் சாப்பிட செல்கின்றனர்.
அடுத்ததாக இரண்டாவது Round போட்டி நடைபெற போட்டியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில் தொகுப்பாளர் அடுத்த போட்டிக்கான விதிமுறைகளை மொத்தமாக ஆங்கிலத்தில் மட்டுமே கூறுகிறார். இதனால் சரவணன் ஒன்றும் தெரியாமல் திருதிருவென முழித்தார். போட்டியை தொடங்கும் நேரத்தில் சந்தியா குறிப்பிட்டு ஒரு நிமிடம் என போட்டியின் விதிமுறைகளை தமிழில் சொல்லுங்கள் என வாக்கு வாதம் செய்கிறார். அடுத்ததாக சந்தியாவுக்கு நடுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் தமிழில் சொல்ல ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அடுத்த முறை இதுபோன்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சரவணன் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என மோகன் வைத்தியா கூறுகிறார்.
எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy
சந்தியாவின் சரி என சொல்ல போட்டியின் விதிமுறைகள் தமிழில் சொல்லப்படுகின்றன. இதனால் சரவணன் மகிழ்ச்சி அடைகிறார். இந்த பக்கம் அர்ச்சனா இங்கிலீஷ் புரியாமல் சரவணன் இதோட வெளியே வந்துவிடுவார் என பார்த்தால் இந்த சந்தியா எல்லாத்தையும் கெடுத்துட்டா.. முதல்ல இவ வாய் திறக்காத மாதிரி ஏதாவது பண்ணனும் என திட்டம் போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.