சரவணனை போலீசார் கைது செய்ய வக்கீல்கள் கைவிரித்து விட்ட சந்தியா அதிரடி முடிவு எடுக்க உள்ளார்.

Raja Rani 2 Episode Update 24.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பரிசோதனைக்காக கடையில் இருந்து அனைத்து பொருட்களிலும் சேம்பலை எடுத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சரவணன் சாதகமாக வேற என்ன நடந்தது என கேட்க செல்வம் நடந்த விஷயங்களை சொல்ல சந்தியா தான் எல்லாத்துக்கும் காரணம் என ஆதி கோரிக்கையுடன் சிவகாமி சந்தியாவை பிடித்து திட்டுகிறார்.

மறுநாள் காலையில் சரவணன் கடையில் இருந்த போது மூன்று பேர் குடிபோதையில் வந்து சமோசா சாப்பிட கேட்கின்றனர். அவர்கள் சமூக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பாக்கெட்டிலிருந்து கரப்பான் பூச்சியை எடுத்து வைத்து சமோசாவில் கரப்பான் பூச்சி இருக்கிறது என்ன கடை நடத்துற என சண்டையிட தொடங்குகிறார். பிறகு சரவணனை மரியாதை இல்லாமல் பேச கோபப்பட்ட சரவணன் இருவரையும் அடித்து வெளியே துரத்த அந்த நேரத்தில் ஒருவர் குட்கா பாக்கெட்டுகளை எடுத்து சரவணன் கடையில் மறைத்து வைத்து விடுகிறார்.

பிறகு போலீஸ் அந்த இடத்திற்கு வர அவர்கள் சமோசாவில் கரப்பான் பூச்சியில் இருந்ததாகக் கூற சரவணனிடம் என்னப்பா இது என கேட்கின்றனர் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என கூற இந்த மூவர் அதுமட்டுமில்லாமல் கடையில் இவர் குட்கா விற்கிறார் என சொல்ல போலீசார் பரிசோதனை செய்து குட்கா பாக்கெட்டுகளை எடுக்கின்றனர்.

பிறகு போலீஸ் அந்த இடத்திற்கு வர அவர்கள் சமோசாவில் கரப்பான் பூச்சியில் இருந்ததாகக் கூற சரவணனிடம் என்னப்பா இது என கேட்கின்றனர் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என கூற இந்த மூவர் அதுமட்டுமில்லாமல் கடையில் இவர் குட்கா விற்கிறார் என சொல்ல போலீசார் பரிசோதனை செய்து குட்கா பாக்கெட்டுகளை எடுக்கின்றனர்.

பிறகு சரவணன் எந்த தப்பும் செய்திருக்க மாட்டான் என குடும்பத்தார் அனைவரும் சொல்லியும் கேட்காத போலீஸ் அவரை தரதரவென ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பயங்கரமாக அடிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த குடும்பத்தார் சரவணன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். சந்தியா போலீசிடம் ஏன் இப்படி பொய் கேஸ் போட்டு அவரை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க என கேட்க போலீசார் அனைவரையும் வெளியே துரத்தி விடுகின்றனர்.

சந்தியா ஐஜிக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. பிறகு தன்னுடைய தோழியின் கணவர் வழக்கறிஞர் தான் அவரை வரச் சொல்லி இருப்பதாக சந்தியா சிவகாமியுடன் சொன்ன அந்த நேரத்தில் வழக்கறிஞரும் வந்துவிடுகிறார். பிறகு அவர் போலீசாரிடம் சென்று பேச குட்கா விற்றதற்கான ஆதாரங்களை காட்டுகிறார். பிறகு வெளியே வந்த வழக்கறிஞர் இந்த மாதிரி போதைப்பொருள் வழக்கில் நான் ஆஜராவது இல்லை எனக் கூறி நழுவிக் கொள்கிறார்.

பிறகு சந்தியா சரவணனை பார்க்க சரவணன் சந்தியாவிடம் கருணாகரன் மாதிரி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களால் தப்பு செய்யாமல் என்று நான் பாதிக்கப்பட்டிருப்பது உங்களால் பார்க்க முடிகிறது ஆனால் நிறைய பேர் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் போலீஸ் அதிகாரியாக இருந்திருந்தால் நியாயத்தின் பக்கம் நின்று இருப்பீர்கள், அந்த கருணாகரனை கைது செய்து இருப்பீர்கள். வீட்டை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் ஆனால் நாட்டை பார்த்துக் கொள்ள உங்களை மாதிரியான ஆட்கள் தேவை என எடுத்துச் சொல்கிறார். இதனால் சந்தியாவின் மனநிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.