கை செயலிழந்த நிலையில் இனி போட்டி வேண்டாம் என சரவணன் முடிவெடுத்துள்ளார்.
Raja Rani 2 Episode Update 15.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் டிஸ்சார்ஜ் செய்து அனைவரும் காரில் ஹோட்டலுக்கு வந்து இறங்குகின்றனர். சரவணன் உள்ளே சென்றதும் சிவகாமி சந்தியாவை நிற்க வைத்து இவ்வளவு ஆகியும் உனக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா எனக் கேட்க சந்தியா நான் என்ன அத்தை செய்தேன் என கேட்கிறார். அன்னைக்கு நீங்க அர்ச்சனா கிட்ட சரவணனுக்காக சந்தியா இவ்வளவு செய்யிறது ரொம்ப சந்தோஷமா இருக்குனு பேசும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா இப்போ இப்படிக் கேட்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என கூறுகிறார்.
அவர் முழுசா குணமாகணும் என்று தான் நான் நினைக்கிறேன் என கூறுகிறார். அவர நீங்க கஷ்டப்பட்டு விடக் கூடாது என்று எந்த ஒரு வலியையும் அவர தாங்க விடல. அதுதான் இன்னைக்கு பிரச்சனை என கூறுகிறார். அவர் எந்த இடத்திலும் இருந்தாரோ அந்த இடத்திலேயே தலை நிமிர்ந்து நிக்கணும், அதுதான் அவருக்கு தைரியத்தையும் மன வலிமையையும் கொடுக்கும் என கூறுகிறார். எனக்கு ஒரே ஒரு உறுதி மட்டும் கொடுங்க நான் இப்பவே உங்களோட கிளம்பி ஊருக்கு வரேன் என கூறுகிறார்.
அவருக்கு இனிமே இப்படி ஆகவே ஆகாது நீ சொல்லுங்க என கூற சிவகாமி வாயடைத்து நிற்கிறார். வாழ்க்கையில எந்த நேரமும் நாம அவரோட இருக்க முடியாது. அவருக்கான வாழ்க்கையை அவர் வாழட்டும் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்டும் சிவகாமி எல்லாம் போதும் இனி எதுவும் வேண்டாம், எல்லாருக்கும் ஊருக்குப் போக டிக்கெட் போட்டு என கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.
இந்த பக்கம் அர்ச்சனா சரவணன் போட்டியில் கலந்து கொள்ளாதது நினைத்து சந்தோஷமாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஷல்மா வர அவரிடமும் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பக்கம் ரூமில் அமர்ந்துகொண்டு அர்ச்சனா, செந்தில், ஆதி மற்றும் பார்வதி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இனிமேல் சரவணா நாள் போட்டியில் ஜெயிக்க முடியாது அத்தகைய வெச்சுட்டு என்ன பண்ணுவார் என அர்ச்சனா ஆதியும் நக்கலாக பேசுகின்றனர். பார்வதியும் செந்திலும் அவர்களை திட்டுகின்றனர்.
இந்த பக்கம் அர்ச்சனா சரவணனை வாக்கிங் கூட்டிச் செல்கிறார். அப்போது சரவணன் அனைவருக்கும் இனி என்னால் எதுவும் செய்ய முடியாது. ஸ்வீட் கடையைக் கூட எப்படி நடத்தப் போகிறேன் என தெரியவில்லை. இனி யார் கையை நம்பி இருப்பேன் என தெரியல. இனி எல்லாமே முடிஞ்சு போச்சு என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. போதும் நீங்க போட்டி நடக்கிறது கிட்ட பேசுங்க நாம ஊருக்கு கிளம்பலாம் என கூறுகிறார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.