சந்தியாவுக்கு ஆதாரம் ஒன்று கிடைக்க அதனால் சிக்க உள்ளார் சாமியார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா அர்ச்சனா தெரியாமல் தவறு செய்துவிட்டார் அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்ள அப்போது சரவணன் என்னங்க நீங்க சாமி எல்லாம் கும்பிடுறீங்க என கேட்க எனக்கும் கடவுள் மேல நம்பிக்கை இருக்கு ஆனால் சாமியார்கள் மீது தான் நம்பிக்கை இல்லை என கூறுகிறார். ஆனால் சரவணன் எனக்கு என்னவோ இந்த சாமியார் சக்தி உள்ள சாமியார் போல தான் இருக்கிறது எப்படி சரியாக அவரால் அந்த மண்ணுக்குள் இருந்து சுவாமி சிலையை எடுக்க முடிந்தது என கூறுகிறார். இந்த சாமியார் போலீஸ் சாமியார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என சந்தியா யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பக்கம் சிவகாமியுடன் அவருடைய கணவர் பேசி கொண்டிருக்கும்போது அர்ச்சனா செய்தது பெரிய தப்பு ஆனால் நீ அதை கண்டிக்கவில்லை என கூறுகிறார். இந்த சாமியார் பேரை கேட்டதும் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை அவர் மேல எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு என சிவகாமி சொல்கிறார்.
சந்தியா யோசனையில் இருக்கும் போது அவருக்கு சல்மா போன் செய்து தென்காசியில் ஒரு மால் கட்டப் போவதாக கூறுகிறார். அது உன் சக்தி காலேஜ் பக்கத்தில் கட்டப்பாவதாக தெரிவிக்க சந்தியா அதிர்ச்சி அடைந்து விஷயங்களை சேகரிக்க கோவிந்தன் என்பவர் தான் அந்த இடத்தை வாங்கி கொடுக்கப் போவதாக கூறுகிறார். அவர் அடிக்கடி ஜலபுல ஜிங் என சொல்லிக் கொண்டே இருப்பார் என அது இந்த சாமியார் தான் என சந்தியாவுக்கு தெரிய வருகிறது.
அதன் பிறகு சாமியார் அந்த ஏரியாவுக்கு வர சிவகாமி குடும்பத்தார் அனைவரும் ஓடி சென்று வழிபடுகின்றனர். சிவகாமி சாமியார் தன்னுடைய வீட்டுக்கு தான் வரவேண்டும் என கூப்பிட எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க என கூப்பிடுகின்றனர். தேங்காயின் கற்பூரம் ஏற்ற வேண்டும் யாருடைய தேங்காய் முதலில் உடைகிறது அவர் வீட்டுக்கு தான் வருவேன் என சொல்லி அனைவரிடமும் ஒரு தேங்காய் கொடுக்கிறார் சாமியார். சிவகாமி வசதியான குடும்பம் என்பதால் அவரிடம் இருந்து அதிகம் ஆட்டைய போட அவரிடம் ஏற்கனவே உடைந்து தேங்காய் வை கொடுத்து கற்பூரம் ஏத்தி அவர் வீட்டுக்கு தான் செல்வேன் என கூறுகிறார். இதனால் சிவகாமி மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.