Rain Alert
Rain Alert

Rain Alert – சென்னை: தென் கடலோர பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, “வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளது; இந்த புதிய காற்றழுத்தம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவாகி உள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் வரும் டிசம்பர் 25 – ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது; மேலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு கடலோர பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில நேரங்களில் சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடந்து, தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.