இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவரும் சீரியல் நடிகை ரட்சிதா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் தான் ‘சரவணன் மீனாட்சி’ . இந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் ரட்சிதா. இதனைத் தொடர்ந்து’ நாம் இருவர் நமக்கு இருவர் ‘ என்ற சீரியலில் நடித்து வந்த இவர் பாதியிலேயே விலகிவிட்டார்.இவர் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் “இது சொல்ல மறந்த கதை” என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்த சீரியலில் இருக்கும் கதை போலவே தனது வாழ்க்கையிலும் ஒன்றுப்போலவே நடந்து கொண்டிருக்கிறது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ரட்சிதா அவர்கள் விவாகரத்து ஆன பிறகு அவ்வப்போது கவர்ச்சியான ரில்ஸ் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில்  ரட்சிதா 2 வது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரட்சிதா தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போவதாகவும் இருவருக்குமிடையே ஒரு காதல் கதை இருப்பதாகவும் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுகுறித்து ரச்சித்தா விளக்கம் அளித்தால் தான்  தெரியவரும்.