கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை  குறித்து தொகுப்பாளினி பிரியங்கா மகிழ்ச்சியோடு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.  சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரியங்கா தற்போது வரை  மா.கா.பா உடன் இணைந்து அந்நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து தனது தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கும்  மகிழ்ச்சியான தகவலை சமீபத்தில்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

அதனைத் தொடர்ந்து இவர் தனது தம்பியின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது என்றும் தான் அதிகாரபூர்வமாக அத்தை ஆகிவிட்டேன் என்ற மகிழ்ச்சியான தகவலை  வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தனது தம்பியின் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் மகிழ்ச்சியோடு “ihaa ❤️ chiya” என்று பதிவிட்டுயிருக்கிறார்.