சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்களாக பணியாற்று இருப்பவர்கள் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த். இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை இவர்களைத் தாண்டி வேறு யாரும் சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என தோன்றும் அளவிற்கு தொடர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குகின்றனர். இப்படியான நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு என தெரியவந்துள்ளது.
இருவருமே ஒரு எபிசோடுக்கு தலா இரண்டு லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைக் கேட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா தலையே சுத்துது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.