நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என பிரியா ஆனந்த் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாமியார் அவதாரம் எடுத்து பல்வேறு இடங்களில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார் நித்தியானந்தா. பாலியல் குற்றச்சாட்டு உட்பட இவர் மீது பல்வேறு புகார்கள் போலீஸ் இடம் இருந்து வருகிறது. ஆனாலும் நித்தியானந்தா யார் கையிலும் சிக்காமல் கைலாச என்ற தனித்தீவை உருவாக்கி தினம் தோறும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது நித்தியானந்தா குறித்து பேசி உள்ளார் பிரியா ஆனந்த்.
அதாவது நித்யானந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரை திருமணம் செய்தால் என்னுடைய பெயரை மாற்ற வேண்டிய அவசியம் கூட இல்லை. அவரை இத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்றால் நிச்சயமாக அவரிடம் ஏதோ இருக்கு என்பது தானே அர்த்தம் என பேசி உள்ளார்.
ப்ரியா ஆனந்த் சாமியார் நித்தியானந்தா குறித்து இவ்வாறு பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.