திரைப்படத்தை தடை செய்தது தவறு: மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ்ராஜ்..

Web Ads

மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்..

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானிய நடிகர் ஃபவாட் கான் நடித்த ‘அபீர் குலால்’ படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அபீர் குலால்’ படத்துக்கு தடை தவறு என்றும், அரசுக்குப் படங்களைத் தடை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்தப் படத்தையும் தடை செய்வதை நான் எதிர்க்கிறேன். அது நல்ல படமாக இருந்தாலும் சரி, விளம்பரப் படமாக இருந்தாலும் சரி. அதை மக்கள் தீர்மானிக்கட்டும், மக்களுக்கு உரிமை உண்டு. ஆபாசப் படம் அல்லது குழந்தைகள் மீதான வன்கொடுமை பற்றிய படத்தை தவிர, நீங்கள் எந்தப் படத்தையும் தடை செய்ய முடியாது. அவர்களை வர விடுங்கள்’ என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

‘அபீர் குலால்’ படத்தை ஆர்த்தி எஸ்.பாக்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஃபவாட் கான் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டுக்குத் திரும்பினார். மே 9 அன்று படம் வெளியாக இருந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதை அடுத்து, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ‘அபீர் குலால்’ படத்தைத் தடை செய்தது. இந்தப் படத்தில் வாணி கபூர் முதல் முறையாக ஃபவாட் கானுடன் நடித்துள்ளார்.

prakashraj comments on abir gulaal movie ban in india
prakashraj comments on abir gulaal movie ban in india