போதும் இதோட நிறுத்திக்கோங்க என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து அர்ச்சனாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார் பிரதீப் ஆண்டனி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சி ஏழாவது சீசன் இன்றோடு மொத்தமாக முடிய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளார்.
இப்படியான நிலையில் பிரதீப் ஆண்டனி தனக்காக தற்போது வரை சமூக வலைதளங்களில் சண்டை இட்டு வரும் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து பதிவு செய்துள்ளார். அதாவது போதும் இதோட நிறுத்திக்கோங்க அநியாயத்துக்கு மேல அநியாயம் பண்றீங்க வன்மம் இதோடு முடிவுக்கு வரட்டும் என தெரிவித்துள்ளார். மேலும் நான் ஜாலியா தான் இருக்கேன் நீங்களும் சந்தோசமா ஜாலியா இருங்க என தெரிவித்துள்ளார்.
அதோடு அர்ச்சனா டைட்டில் வென்றதாக விகடன் எல்லாம் செய்தி வெளியாகி இருக்கு, அப்படின்னா உண்மையா தான் இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் அர்ச்சனா. குறுக்கே வந்த கௌஷிக் என கார்ட் என்ட்ரி மூலம் வந்தவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.