trichy
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2வது குற்றவாளி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.

Police arrested second accused in lalitha jewell robberry – திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை 1 மணியளவில், சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுவிட்டனர்.

முகத்தில் குழந்தைகள் அணியும் முகமுடி அணிந்து அவர்கள் நகைகளை திருடி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த திருட்டு சம்பவம் திருச்சி போலீசாருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. எனவே, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.

உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் வாங்க – சாண்டி அழைப்பு .!

இந்த கொள்ளையை தொடர்ந்து, தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் கொள்ளையடித்த நகைகள் கொண்ட ஒரு பையுடன் வந்த இருவரில் மணிகண்டன் என்பவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

அவனுடன் வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட மணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் 8 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு மாதமாக நோட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தப்பியோடிய சீராதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட சுரேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரிடமும் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.