பத்து தலை படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தர மறுத்துள்ளது தமிழக அரசு.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் 10 தல.
ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த கௌதம் மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஃப்டி படத்தின் ரீமைக்காக இந்த திரைப்படம் வெளியாகுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாளை வெளியாக இருந்த இந்த படத்தில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி தர மறுத்துள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனால் அதிகாலை காட்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.