Pasumai 8 vazhi salai :
Pasumai 8 vazhi salai :

Pasumai 8 vazhi salai : திருவண்ணாமலை: 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என சேலத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், திருவண்ணாமலை, செங்கத்தில் கருப்பு கொடியேற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய நீர்வழி மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி , சென்னை மற்றும் சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இவ்வாறு அவர் அறிவித்தது, விவசாயிகளிைடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால், திருவண்ணாமலை அடுத்த சாலையனூர் கிராமத்தில் பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நேற்று விளை நிலத்தில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கான காரணமாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதேபோல், செங்கம் பகுதியில் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்பினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

இந்த தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று அவர்கள் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.